இக்கட்டான நிலையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

இக்கட்டான  நிலையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி விக்கெட்டை  இழந்து தடுமாறி  வருகின்றது.ஐசிசி  2025 க்கான வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நேற்று தொடங்கியது.இதில்  முதல் இரு இடங்களை புள்ளி பட்டியலில் பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு  இடையிலான போட்டி லண்டன் லார்ட்ஸ்  மைதானத்தில் தொடங்கியது 
டாஸ்சில் வெற்றி  பெற்ற   தென்னாப்பிரிக்கா பௌலிங் தேர்ந்த்தெடுத்தது 


முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே விக்கெட்டை இழந்து தடுமாறி வந்தது 67-4 விக்கெட்யென இருந்தது பின்னர்  வந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் இருவரும் தடுப்பாட்டத்தில்  ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.இருவரும் அரை சதைத்தை பூர்த்தி செய்தனர்.ஸ்டீவ் ஸ்மித் 66 மற்றும் வெப்ஸ்டர் 72 ரன்களிலும் தங்கள் விக்கெட்டை இழந்தனர் அடுத்து வீரர்கள் பெரிய அளவில் ரன்  அடிக்காமல் நடையை கட்டினார் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 30-4 இழந்து மிகவும் பரிதாபமான நிலையில்  உள்ளது இன்று இரண்டாம் ஆட்டம் இந்தியா நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

Comments